வரவிருக்கும் 2024 மக்கள வைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான காலங்களே உள்ள நிலை யில், கூட்டணி தொடர்பான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் - தெலுங்கு தேசம் - ஜன சேனா - ஜெகன் மோகனின் சகோதரி சர்மிளாவின் கட்சி என பிரம்மாண்ட கூட்டணி உதயமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாட்டிகொண்டா தொகுதி எம்எல்ஏ வான உண்டவல்லி தேவி, உதயகிரி எம்எல்ஏவான எம்.சந்திரசேகர ரெட்டி, முன்னாள் மேலவை உறுப்பினரான ராதாகிருஷ்ணய்யா ஆகியோர் தனது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் ஊர்வலமாக சென்று அமராவதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி யின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னி லையில் அவரது கட்சியில் இணைந்த னர்.
3 எம்எல்ஏக்கள்
தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஏற்கெனவே பதவியில் இருந்த எம்எல்ஏக் களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் படுதோல்வியை சந் தித்து ஆட்சியை இழந்தது என அரசி யல் நிபுணர்கள் கருத்து தெரிவித்த நிலையில், நமக்கும் இதுமாதிரியான முடிவு அமைந்து விடக் கூடாது என்ப தற்காக தற்பொழுது எம்எல்ஏவாக உள்ள 40 பேருக்கு வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் வாய்ப்பு கிடையாது என ரகசிய பெயர் பட்டியலுடன் முதல் வர் ஜெகன்மோகன் புதிய திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலுக்குப் பின் கடந்த வாரம் மங்களகிரி ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி தனது பத வியை ராஜினாமா செய்தார். அடுத்த 4 நாட்களில் மேலும் 2 எம்எல்ஏ-க்கள் வெளியேறி தெலுங்கு தேசத்தில் இணைந் துள்ளதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியின் மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 148 ஆக குறைந்துள்ள நிலையில், ஜெகன் மோகனின் மறை முக திட்டத்தால் மேலும் 30 எம்எல்ஏக் கள் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர அரசிய லின் நிலைமை பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இரண்டு மடங்கானது
கடந்த வாரம் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் 40 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்கவாய்ப்பில்லை என்றும், இதுகுறித்து மறைமுக பட்டியல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகனிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையில், 82 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்க விருப்பம் இல்லை எனவும், இதுகுறித்து மாவட்டம் வாரியாக ஜெகன்மோகன் பட்டியல் தயார் செய்து வைத்திருப்ப தாகவும், ஜனவரியில் இதுகுறித்து தக வல் தெரிவிக்கப்படும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.